Popular Posts

ஏப்ரல் 06, 2012

சித்திகளைப் பற்றி 

ஏராளமான விபரங்களைப் பெரும் பெரும் சித்தர்கள் எழுதியுள்ளார்கள். தாயுமானவரின் மிகப் பிரபலமான 'தேஜோமயானந்தப் பத்து'  பாடல்களில் ஒன்றாகிய 'கந்துக மதக் கரி' பாடலில் ஒரு பட்டியலைக் காணலாம்.

"கந்து உக மதக்கா¢யை வசமா நடத்தலாம்;
    கரடி,வெம்புலி வாயையும்
     கட்டலாம்; ஒரு சிங்கம் முதுகின்மேல் கொள்ளலாம்;
    கட்செவி எடுத்து ஆட்டலாம்;
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்
    வேதித்து விற்று உண்ணலாம்;
     வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;
    விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்று ஒரு
    சா£ரத்திலும் புகுதலாம்;
     ஜலம்மேல் நடக்கலாம்; கனல்மேல் இருக்கலாம்;
    தன்னிகா¢ல் சித்தி பெறலாம்;
சிந்தையை அடக்கியே "சும்மா" இருக்கின்ற
    திறம் அ¡¢து! சத்து ஆகி என்
     சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!
    தேஜோ மய ஆனந்தமே!

தாயுமானவர்

மதயானையை அடக்கிவிடலாம்;
கரடி, புலி வாயைக்கட்டலாம்;
சிங்கத்தின் மீது சவா¡¢ செய்யலாம்;
பாம்பை எடுத்து ஆட்டலாம்;
இரசவாதம் என்னும் வித்தையால் உலோகங்களைப் பொன்னாக மாற்றி
வாழ்க்கை நடத்தலாம்;
மாயமாக மறைந்து புலனாகாமல் தி¡¢யலாம்;
தேவர்களையும் அடிமைப்படுத்தலாம்;
காயகல்பம் செய்து இளமையோடு இருக்கலாம்;
கூடுவிட்டுக் கூடு பாய்ந்து வேறொரு உடலுக்குள் புகுந்து கொள்ளலாம்;
ஜலஸ்தம்பனம் செய்து நீர்மேல் நடக்கலாம்;
அக்கினிஸ்தம்பனவித்தை பு¡¢ந்து நெருப்பின்மேல் இருக்கலாம்;
ஒப்பில்லாத சித்திகள் பெற்றுவிடலாம்.

கருத்துகள் இல்லை: