எல்லா கடவுள்களும் தேவதைகளும் உண்மையே-1
இந்து மதத்தில் மட்டும் இத்தனை கடவுள்கள், தேவதைகள்,சிறு தெய்வங்கள் வழிபாடு உள்ளதே என பலரும் அடிக்கடி கேட்கிறார்களே .அவர்களுக்கான பதிவு இது.
போக மகரிஷி 7000 , புலிப்பாணி ஜாலம்,அகத்தியர் பாடல்கள் முதலான நூல்களில் இதற்கான விளக்கத்தைக்காணலாம்.
1 ) சிவபெருமான் கயிலாயத்தில் இருக்கிறார்.அவரே அதனை சித்தவிதிகளுக்கும் ஆதிஆனவர்.அவர் அந்த ரகசியங்களை நந்தி தேவருக்கு சொல்ல அவர் மூலம் மற்ற சித்தர்களுக்கு பல்வேறு விஷயங்கள் பரவின.
எனவே சிவன்,பார்வதி,நந்தி ஆகியோர் இருப்பது உண்மையே.
2 ) சுப்ரமணியர் என்ற முருகன் தான் அகத்திய முனிவரின் குரு ஆவார். இதனை சுப்ரமணியர் ஞானம் என்ற நூல் தெரிவிக்கிறது.இத்தனை எழுதிய முருகன் ஒரு சித்தர் என்பது உண்மை.
3 ) போகர் தனது நூலில் விநாயகர் பற்றி குறிப்பிட்டுள்ளார்.சிறப்பாக ஆதி நாளில் வாழ்ந்த மிக சிறந்த சித்தர் விநாயகர் எனவும் தன்நிகரற்று விளங்கினார் எனவும் ஒருகையில் ஒடிந்த தந்தமும் மறு கையில் பாசமும் கொண்டு அவர் சமாதியில் இருந்ததை தாம் நேரில் கண்டதாக உறுதிபட கூறுகிறார் முனிவர்.அவரை மக்கள் தெய்வமாக்கி வழிபடுகின்றார் எனவும்
கூறுகிறார்.விநாயகரும்கடவுளாக வழிபட பெரும் ஒரு சித்தர் என்பதும் உண்மையே.
4 )விஷ்ணு பகவானின் சமாதியில் அசரிரி வாக்கு கேட்டதாகவும்,கண்ண பிரானின் சமாதி ,மார்க்கண்டேயரின் சமாதி ,ரேனுகையின்( இன்றைய ரேணுகா தேவி )சமாதிகளை நேரில் கண்டதாக தெரிவிக்கிறார் போக முனிவர். ஆகவே விஷ்ணு,கிருஷ்ணன்,ரேணுகா தேவி ஆகிய தெய்வங்கள் இருப்பது உண்மையே.
5 ) புலிப்பாணி முனிவர் தனது நூலில் பிரத்யங்கிரா தேவியின் பெருமைகளை விரிவாக விளக்கி இருக்கிறார்.இந்த தேவியை வழிபாடு செய்பவன் சர்வ வல்லமை பெற்றவனாக விளங்குவான் என்று தெரிவிக்கிறார்.மேலும் நரசிம்ம ரூபத்தையும் அதன் பெருமையையும் தெரிவித்துஇருக்கிறார். இந்த இரண்டு தெய்வங்களிடம் தஞ்சம் அடைந்தவர்களின் ஏவல்/பில்லி/சூனியம் நீங்கி விடும் என்பது இன்றைக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். எனவே நரசிம்மர் / பிரத்யங்கிரா தேவி போன்ற தெய்வங்கள் இருப்பது உண்மையே.
தொடர்ச்சி அடுத்த பதிவில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக